ஒன்றரை ஆண்டு காத்திருந்தால் மூன்றில் இரண்டு
பலத்துடன்
மஹிந்த பிரதமராகியிருக்கலாம்
– கோத்தாபய ராஜபக்ஸ தெரிவிப்பு
மஹிந்த
ராஜபக்ஸ இன்னும்
ஒன்றரை ஆண்டுகள்
காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்
பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும் என்று முன்னாள்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில்
நேற்று ‘எலிய’
அமைப்பு ஏற்பாடு
செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.
”இன்னும்
ஒன்றரை ஆண்டுகள்
மஹிந்த ராஜபக்ஸ
காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன்
பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர்
கேட்கின்றனர். மஹிந்த ராஜபக்ஸவினால் அதனைச் செய்ய
முடியும் என்று
எனக்கு நன்றாகத்
தெரியும்.
தேர்தலுக்காக
இன்னும் ஒன்றரை
ஆண்டுகள் மஹிந்த
ராஜபக்ஸ காத்திருந்தால்,
மூன்றில் இரண்டு
பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.
ஆனால்
பிரச்சினை என்னவெனில்,
நாடு இன்னமும்
ஒன்றரை ஆண்டுகளுக்கு காத்திருக்க
முடியுமா? என்பதேயாகும்.
ரணில்
விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது,
பார்வையாளர் மாடத்தில் இருந்த மேற்குலக இராஜதந்திரிகள்
கைதட்டி வரவேற்றனர்”
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment