கல்முனையில் தேசிய
வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபை நகரக் காரியாலயத் திறப்பு விழா
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நகரக்காரியாலய திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின்
இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி
வை.எல்.எஸ் ஹமீட் அவர்களின் அழைப்பின் பேரில் சமுர்த்தி ,வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்வைபவத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் இரண்டாம் கட்ட
நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர்
நாயகம் சட்டத்தரணி வை.எல் .சாஹுல் ஹமீட், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் உயரதிகாரிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளர் பொறியலாளர் அன்வர்
எம முஸ்தபா, கல்முனை மாநகர
சபை உறுப்பினர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
- KALAIMAKAN
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.