அமைச்சரவையில் சர்வாதிகார
போக்கு தென்படுகின்றதாம்
இவ்வாறு கூறுகின்றார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
அமைச்சரவையில்
சர்வாதிகார போக்கு தென்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்களும் அமைச்சரவையின் சில உறுப்பினர்களும் கடும்போக்குடைய
தன்மையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி
கனவிலிருப்பவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டுமென அவர்
மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவையின் ஒரு சில உறுப்பினர்கள் கடுமையான
சர்வாதிகார போக்கில் செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ள்துடன் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
20ம்
திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென
அவர் கோரியுள்ளார். இந்த விடயத்தை எளிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.