குருநாகல் மாவட்டத்தின் நீர் விநியோகத் திட்டங்களுக்கு
ரூபா 240 மில்லியன்
நிதி ஒதுக்கீடு
குருநாகல்
மாவட்டத்தின் நீர் விநியோகத் திட்டங்கள் தொடர்பான
கலந்துரையாடல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
தலைமையில் இன்று 23 ஆம் திகதி காலை நீர் வடிகாலமைப்பு அமைச்சின் 4ம் மாடியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி
ஜவஹர்ஷா ம்ற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் உட்பட அமைச்சு
அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குருநாகல் மாவட்டத்தின் நீர் விநியோகத் திட்டங்களுக்காக ரூபா 240 மில்லியன் நிதி மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.