தூதுவர் கல்முனை அஸீஸ் எழுதிய

ஐந்து கண்டங்களின் மண்

கவிதை நூல் வெளியீட்டு விழா

(சாய்ந்தமருது- எம்.எஸ்.எம். சாஹிர்)


முன்னாள் தூதுவரும் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியுமான கல்முனை எச்..அஸீஸ் எழுதியஐந்து கண்டங்களின் மண்கவிதைநூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 26ஆம் திகதி வியாழன் பி. 04.45 மணிக்கு  கொழும்பு தமிழ்ச சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில், டாக்டர் தாஸிம் அஹ்மது தலைமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எம்.. நுஃமான் கலந்து கொள்ளவுள்ளார்.
எம்.எஸ்.ஹமீத் வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், அறிமுகவுரையை சட்டத்தரணி .எம்.பாயிஸும், நூல் மீளாய்வை சுமதி சிவமோகனும், கருத்தை தம்பு சிவாவும், சிறப்புக் கவிதையை காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீனும், சிறப்புரையை பேராசிரியர் எம்.. நுஃமானும், நிகழ்ச்சித் தொகுப்பை .ஆர்.எம்.ஜிப்ரியும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்பாய் அழைக்கின்றனர்

ஏற்பாட்டுக் குழுவினர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top