வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பினால்
வைத்தியசாலைகள் வெறிச்சோடின
அரச வைத்தியர் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பணி பகிஷ்கரிப்பினால் வைத்தியசாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மழையினால் அனர்த்தத்திற்கு உள்ளான கேகாலை,கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களிலுள்ள குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளில் இந்த பணி பகிஷ்கரிப்பு இடம்பெறவில்லை என அரச வைத்தியர்கள் சங்கம் கூறியுள்ளது.
அத்துடன் சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் வழமைப் போல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் சிலாபத்திலும் வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதனால் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் நோயாளிகள் மருந்துக்காக காத்திருக்கும் நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.