இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி


இலங்கையில் வடக்கு,கிழக்கு மாகாங்களில் உள்ள  தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.
 முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பிய இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை அனுப்பிய கடிதத்தின் விவரம்:
 சட்டப் பேரவைத் தேர்தலில், அதிமுக பெற்ற வெற்றி குறித்த பாராட்டுக் கடிதத்துக்கு மனமார்ந்த நன்றி.
 தமிழக மக்களின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க, அவர்கள் உரிய நீதியைப் பெற என்னால் (ஜெயலலிதா) இயன்ற நடவடிக்கைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் எடுத்துள்ளேன்.
 தொடர்ந்து நடவடிக்கைகள்: இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழர்கள் உரிய நீதியைப் பெறும் வகையில், இந்திய அரசின் மூலம் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 தமிழகம்-இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழர்கள் உறவு மேலும் வலுவடையும் வகையில் என்னைச் சந்திக்க நீங்கள் தெரிவித்த விருப்பம் குறித்து மிகுந்த மகிழ்ச்சி. இருவருக்கும் வசதிப்படும் ஒருநாளில் நிச்சயம் சந்திக்கலாம். நல்வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றிகள் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top