கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு
இன்று மாலை ஆறு மணிக்கு
அவசர கூட்டம்
இன்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமத், அம் மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நஸீர் அஹமத் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ஏசிப்பேசியதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருவதாக மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.