குடித்து விட்டு வாகனத்தை செலுத்தவில்லை
திடமாக மறுத்துள்ளார் விஜித ஹேரத்

என் கையால் தவறு நடந்தது உண்மை, ஆனால் நான் குடித்துவிட்டு வாகனத்தைசெலுத்தவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.
விஜித ஹேரத் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியதால் விபத்து இடம்பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்டிருந்ததோடு, பிணையில்விடுவிக்கப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்றஉறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனைகளின் போது தான் மது அருந்தியமைஉறுதிப்படுத்தப்படவில்லை என்றும்,பொலிஸாரும் அவ்வாறான கருத்துக்களைதெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாகனத்தை திருப்ப முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துநிகழ்ந்ததாகவும், அதன் போது தான் சுயநினைவோடு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள விஜித ஹேரத் இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக வழக்கு தொடரட்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை குறித்த விபத்தினால் எந்தவொரு நபருக்கும் பாதிப்பு ஏற்படவில்லைஎன்றும்,தொலைபேசி தூணிற்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்குறிப்பிட்டுள்ளார்..

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top