பதவி இராஜினாமா செய்தி உண்மைக்கு புறம்பானது
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விளக்கம்
இராஜாங்க
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
தனது பதவியை
இராஜினாமா செய்து
விட்டு வெளிநாடு
சென்றுள்ளதாக இன்று 31 ஆம் திகதி செய்திகள்
வெளியாகியிருந்தன. இது தொடர்பில்
அவர் வெளியிட்டுள்ள
விசேட அறிக்கையிலேயே
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த
அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“நான்
இராஜாங்க அமைச்சுப்
பதவியினை இராஜினாமா
செய்து விட்டு
வெளிநாடு சென்றுள்ளதாக
சில ஊடகங்கள்
செய்தி வெளியிட்டிருந்தது.
இதில் எவ்வித
உண்மைத் தன்மையும்
இல்லை.
அதேவேளை
மட்டக்களப்பு பல்கலைக்கழக விரிவாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்கள்
மற்றும் ஒப்பந்தங்களை
செய்து கொள்வதற்காக
வேண்டி மலேசியாவுக்கான
விஜயமொன்றை மேற்கொண்டுள்ளேன்.
இராஜாங்க
அமைச்சர்களது பதவிகள் - அதிகாரங்கள் உடனடியாக வர்த்தமானியில்
வெளியிடப்பட்டு பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று
சகல இராஜாங்க
அமைச்சர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அண்மையில்
வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
இந்தக்
கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
மற்றும் பிரதமர்
ரணில் விக்கரமசிங்க
ஆகியோர் இராஜாங்க
அமைச்சர்களது அதிகாரங்கள் தொடர்பில் ஒருவார காலத்துக்குள்
வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளனர்,
இது தவிரவேறு
எந்தவித தீர்மானங்களும்
எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.