மண்சரிவு மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைஅனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சலுகை கடன் வசதி
மண்சரிவு
மற்றும் மழை வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களினால்
பாதிக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறை
ஊழியர்களுக்கு சலுகை அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட
உள்ளன.
எளிமையான
பிணை அடிப்படையில்
மிகக் குறைந்த
வட்டி வீதத்தில்
கடன் வழங்கப்பட
உள்ளதாகவும் .மக்கள்
வங்கியினால் இந்த கடன் திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்படுகின்றது..
அனர்த்தம்
காரணமாக பாதிக்கப்பட்ட
வீடுகள், சொத்துக்கள்
அல்லது வேறும்
நுகர்வுத் தேவைகளை
பூர்த்தி செய்து
கொள்ள ஐந்து
லட்சம் ரூபா
வரையில் கடன்
வழங்கப்பட உள்ளது.
ஐந்து
ஆண்டுகள் வரையில்
இந்த கடன்
தொகையை மீளச்
செலுத்த அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும்
பிரதமரின் பணிப்புரைக்கு
அமைய இக் கடன் திட்டம்
நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.