நடிகை பிரியா மணிக்கு
முஸ்தபா ராஜுடன் நிச்சயதார்த்தம்
நடிகை பிரியா மணிக்கு (31) அவரது நீண்ட கால காதலன் முஸ்தபா ராஜுடன் பெங்களூரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து நடிகை பிரியா மணி
தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்,
"எனக்கும் முஸ்தபா ராஜுக்கும் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே.27) பெங்களூரு, பனசங்கரியில் உள்ள வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். இதில் இரு குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன், இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றைக் காணச் சென்ற போது பிரியாமணியும் முஸ்தபாவும் சந்தித்துக் கொண்டதாக, அவ்விருவருக்கும் நெருக்கமான தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் இருவரும் இவ்வாண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
'கண்களால் கைதுசெய்' தமிழ் படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை பிரியாமணி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். "பருத்தி வீரன்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.