இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ள
இராஜாங்க அமைச்சர்
அரசாங்கத்தில்
இராஜாங்க அமைச்சராக
பதவி வகித்து
வரும் ஒருவர்
தனது இராஜினாமா
கடிதத்தை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக
அறிவிக்கப்படுகிறது.
இறுதியாக
நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த
தகவலை கூறியுள்ளார்.
இராஜாங்க
அமைச்சர் பதவியை
கொண்டு, மக்களுக்கு
சேவைகளை செய்ய
முடியாது என்பதால்,
பதவியை இராஜினாமா
செய்வதாக, அந்த
இராஜாங்க அமைச்சர்
தன்னிடம் கூறியதாகவும்
ஜனாதிபதி இதன்
போது கூறியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
எனினும்
இராஜினாமா கடிதத்தை
வழங்கியது யார்
என்பதை ஜனாதிபதி
வெளிப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.