மீண்டும் மழை: வெள்ளம், மண்சரிவு!
அவதானமாக இருக்கவும்
அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவிப்பு


நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள அடை மழையினால் களனி கங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
 “தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் பாரிய மழை பெய்து வருகின்றதுதவலம பிரதேசத்தில் நேற்றைய தினமே நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. களனி கங்கையினதும் நீர் மட்டம் சில பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றது. நீர்ப்பாசன திணைக்களத்தின் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், வெள்ள அனர்த்தம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவு குறித்து அவதானமாக இருக்குமாறும், இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top