உள்ளூராட்சித் தேர்தல் – தபால் மூலம் வாக்களிக்க
டிசம்பர் 15இற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்கள் டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏழு மாநகர சபைகள், 18 நகர சபைகள், 68 பிரதேச சபைகள் உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்களை நடத்துவதற்கான வேட்புமனுக்கள் அடுத்த மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 14ஆம் திகதி வரை கையேற்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், நேற்றைய தினத்தில் இருந்தே அரசியல் கட்சிகள், சுயேட்சைக். குழுக்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தேர்தல் நடக்கவுள்ள 93 உள்ளூராட்சி சபைகளிலும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.