பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்
காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
இந்தியா
சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மன்மோகன் சிங், சோனியா
காந்தி, ராகுல்
காந்தி உள்ளிட்ட
காங்கிரஸ் கட்சி
தலைவர்கள் சந்தித்து
பேசியுள்ளனர்.
பிரதமர்
ரணில் விக்ரமசிங்க 4 நாள் பயணமாக
தனது மனைவி
மைத்ரி விக்ரமசிங்கவுடன் கடந்த
செவ்வாய்க்கிழமை இந்தியா சென்றார். இன்று டெல்லி
வந்த விக்ரமசிங்க, பிரதமர் மோடியை
சந்தித்து பேசினார்.
பின்னர் ஜனாதிபதி
ராம்நாத் கோவிந்தையும்
சந்தித்து பேசினார்.
இந்நிலையில்,
காங்கிரஸ் கட்சி
தலைவர் சோனியா
காந்தி தலைமையிலான
4 பேர் கொண்ட
குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேசினர்.
அந்த குழுவில்
முன்னாள் பிரதமர்
மன்மோகன் சிங்,
துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின்
பாராளுமன்ற மேல்சபை துணைதலைவர் ஆனந்த் ஷர்மா
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த
சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்த விவரங்கள்
எதுவும் வெளியிடப்படவில்லை.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.