எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு
இடைக்கால தடை உத்தரவு
உள்ளுராட்சி
மன்ற எல்லை
மற்றும் உறுப்பினர்களின்
எண்ணிக்கைகளை உள்ளடக்கி அண்மையில் வெளியிடப்பட்ட, வர்த்தமானி
அறிவித்தலுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால
தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொழும்பு,
கண்டி, மாத்தறை,
எம்பிலிப்பிட்டிய, ஹாலிஎல ஆகிய
உள்ளுராச்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
6 பேர் குறித்த
வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு
இன்று மூவரடங்கிய
மேன்முறையீட்டு நீதிபதி குழு முன்னிலையில் ஆராயப்பட்ட
போது இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த
இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம்
4ஆம் திகதி
வரை அமுலில்
இருக்கும்.
குறித்த
தடை உத்தரவின்
காரணமாக தேர்தல்
தொடர்ந்தும் தள்ளிவைக்கப்படும் என வழக்கறிஞர்கள் கருத்து
வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.