திருமண வீட்டில் உணவு உட்கொண்டவர்கள்
வைத்தியசாலையில் அனுமதி
ஏறாவூரில் சம்பவம்
ஏறாவூர்
நகரில் உள்ள
திருமண வீடொன்றில்
உணவை உட்கொண்ட
பலர் உடல்
உபாதைக்குள்ளாகிய நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று
நண்பகல் வரை
சுமார் 53 பேர்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்
25 சிறுவர்கள் மற்றும் 18 பெண்கள் உள்ளடங்குவதாக எமது
செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு
உடல் உபாதைக்குள்ளானவர்கள்
தமக்கு தொடர்ச்சியான
வயிற்று வலி,
வாந்தி தலை
சுற்று, வயிற்றுப்
போக்கு காணப்படுவதாக
தெரிவித்தனர்.
ஏறாவூர்
பள்ளியடி வீதியிலுள்ள
திருமண வீடொன்றில்
வழங்கப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதையடுத்து
இந்த அனர்த்தம்
ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
முதலில்
வயிற்றுவலியும் அதனைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கும் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள்
மேலும் தெரிவித்துள்ள்னர்.
இந்த சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.