தென்கொரியா செல்கிறார்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, அடுத்தவாரம்
தென்கொரியாவுக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தென்கொரிய ஜனாதிபதி
மூன் ஜா-இன்னின் அழைப்பின்
பேரிலேயே எதிர்வரும்
28ஆம் நாள்
தொடக்கம் 30ஆம் நாள் வரை, ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
தென்கொரியா-
இலங்கை இடையிலான
இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு
40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்தப் பயணம்
இடம்பெறுகிறது.
எதிர்வரும்
29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவை சந்தித்துப் பேச்சு
நடத்தும் தென்கொரிய
ஜனாதிபதி
மூன், அன்றிரவு ஜனாதிபதிக்கு அரசுமுறை
விருந்துபசாரத்தை அளிப்பார்.
இருநாடுகளுக்கும்
இடையிலான ஒத்துழைப்பை
மேலும் வலுப்படுத்துவது
குறித்து இந்தச்
சந்திப்பில் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.