கொழும்பு – அட்டன் பிரதான வீதியின்
தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில்
இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயம்
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டனில் இருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியானது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் பஸ் சாரதி உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.