கல்முனைக் கல்வி வலயத்தில்
103 மாணவர்களுக்கு 9ஏ தர சித்தி!
கல்விப் பொதுத்தர சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்த
நிலையில் கல்முனைக் கல்வி வலயத்தில் 103 மாணவர்கள் சகல பாடத்திலிலும் ஏ தர சித்தி பெற்றுள்ளார்கள்.
கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் 40 மாணவர்களும், கல்முனை தமிழ் கோட்டத்தில் 31மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 07 மாணவர்களும் ,நிந்தவூர் கோட்டத்தில் 12மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 13 மாணவர்களும் 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர்.
கல்முனை கார்மேல் பற்றிமா பாடசாலையில் 26 மாணவர்களும் கல்முனை மஹ்மூத் மகளிர்கல்லூரியில் 25 மாணவர்களும், கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில்
13 மாணவர்களும், அல்- ஹம்றா 07 மாணவர்களும், அல்- மனார் மஹா வித்தியாலயம் 05 மாணவர்களும், ஷம்ஸ் 02 மாணவர்களும், அல்-மிஸ்பா 01 மாணவனும், உவெஸ்லி உயர்தர பாட்சாலை 04 மாணவர்களும், கனேஷ் வித்தியாலயம் 01 மாணவனும், விபுலானந்தா வித்தியாலயம் 01 மாணவனும், ஆர்.கே.எம் 04 மாணவர்களும், அல்-அஷ்ரப் மகாவித்தியாலயம் 02 மாணவர்களும், அல்-அஷ்ரக் மகா வித்தியாலயம் 09 மாணவர்களும், அல்- மஸ்ஹர் மகாவித்தியாலயம் 03 மாணவர்களும், 9ஏ தர சித்தி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.