மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான
தங்காலை நகரசபை .தே. வசமானது


மஹிந்த ராஜபக்ஸவின் சொந்த இடமான தங்காலை நகரசபையின் அதிகாரம், ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த வகையில், தங்காலை நகரசபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே தெரிவாகியுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சிசே வெற்றியீட்டியிருந்தது.
இருப்பினும், இன்று (26) இடம்பெற்ற உறுப்பினர்களுக்கிடையிலான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தெகிவளை-கல்கிசை மாநகரசபையின் முதல்வர் பதவிக்காக இன்று காலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், சிறிலங்கா பொதுஜன முன்னணி நிறுத்திய நாவலகே ஸ்ரான்லி டயஸ் வெற்றி பெற்றார். அவருக்கு 23 வாக்குகள் கிடைத்தன.
ஐதேக நிறுத்திய முதல்வர் வேட்பாளர் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளே கிடைத்தன.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top