சம்மாந்துறை,
நிந்தவூர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வசம்
இறக்காமம், பொத்துவில்
சிறிலங்கா சுதந்திர கட்சி வசம்
ஒப்பந்தங்கள் கைச்சாத்து
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை ஆட்சி அமைக்க தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
அந்த வகையில், சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் உள்ளவர்கள் தவிசாளர்களாகவும் சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் உள்ளவர்கள்
துணைத் தவிசாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள்
இது போன்று இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளில் சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் உள்ளவர்கள் தவிசாளர்களாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் உள்ளவர்கள் துணைத் தவிசாளர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.