வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு
இறுவெட்டு மூலம்
2017ம் ஆண்டு க. பொ. த. சாதாரண தரப்
பரீட்சை பெறுபேறுகள்
2017ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் 28ம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பரீட்சைப் பெறுபேறுகள் அன்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்படும். மறுதினம் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். ஏனைய பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இம்முறை முதன் முறையாக வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் இறுவெட்டு மூலம் வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற இந்தப் பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரம் பேர் தோற்றியிருந்தனர். ஆகக்கூடிய மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.