15,431 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன்
கொள்ளுபிட்டி பிரதேசவாசி கைது


அதிக விலை கொண்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் 15,431 இனை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் சட்டவிரோதமாக வைத்திருந்த 15,431 மதுபான போத்தல்கள் காணப்பட்டுள்ளதோடு, அவற்றின் பெறுமதி ரூபா 5 கோடிக்கும் அதிகமாகும் என கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர், கொள்ளுபிட்டி, ஆர்.. டி மெல் மாவத்தையில் வசிக்கும் 44 வயதுடைய சந்தேகநபர், கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதை தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபரை எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி மாலிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top