யொவுன்-புர இளைஞர் முகாம்
எதிர்வரும் 28இல் ஆரம்பம்
ஒன்பதாவது
யொவுன்-புர
இளைஞர் முகாமை
நிக்கவரட்டியவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
தேசிய இளைஞர்
சேவைகள் மன்றம்
அறிவித்துள்ளது.
இந்த
நிகழ்ச்சி எதிர்வரும்
புதன்கிழமை (28) ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 1ம்
திகதி வரை
நிக்கவரட்டிய தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை
கேட்போர் கூடத்தில்
இடம்பெறவுள்ளது.
'சிறப்பான
எதிர்காலம் - ஆரம்பம்' என்னும் தொனிப்பொருளில் இவ்வாண்டுக்குரிய
யொவுன்-புர
இளைஞர் முகாம்
நடைபெறவுள்ளது.
இளைஞர்
முகாமின் நிறைவு
விழாவில் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதம மந்திரி ரணில்
விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனை
செயற்றிட்ட முகாமைத்துவ இளைஞர் அலுவல்கள் மற்றும்
தெற்கு அபிவிருத்தி
அமைச்சு, தேசிய
இளைஞர் சேவைகள்
மன்றம், இலங்கை
இளைஞர் சங்க
சம்மேளனம் ஆகியன
இணைந்து இதனை
ஏற்பாடு செய்துள்ளன.
இந்த
இளைஞர் முகாமில்
நாட்டின் அனைத்து
மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
ஏழாயிரம் இளைஞர்
யுவதிகள் பங்கேற்கவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.