காணாமல்போன மத்ரஸா மாணவர்கள் மீட்பு
நேற்று
(25.03.2018) பிற்பகல் மகரகமயில் இருந்து
காணாமல் போனதாக
தேடப்பட்டு வந்த மகரகம கபூரியா அரபு
கல்லூரி மாணவர்கள்
இருவரும் நேற்று
(இரவு 10.30) கொழும்பு-கந்தளாய் பஸ்ஸில் இருந்து
பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக
மாணவர்களது தந்தை தெரிவித்துள்ளார்.
புத்தளம்
பகுதி மாணவர்
ஒருவருடன் சேர்ந்து
இவர்கள் இருவரும்
மத்ரஸா நிர்வாகத்திற்கு
அறிவிக்காமல் திடீரென வெளியேறி வந்ததாக மேலும்
அவர் தெரிவித்துள்ளார்.
தனது
இரு பிள்ளைகளையும்
தேடிக் கண்டு
பிடிப்பதற்காக உளப்பூர்வமாக துஆ செய்தவர்களுக்கும் குறித்த செய்தியை அதிகமதிகம் சமூகவலை
தளங்களில் பகிர்ந்து
உதவிய அத்தனை
அன்பர்களுக்கும் தான் நன்றி கூறுவதாகவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.