கூட்டு எதிரணியின் மிகமுக்கிய பிரமுகர்
ரணிலை கவிழ்க்க உதவமாட்டார்?
பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணை நாடாளுமன்றத்தில்
விவாதிக்கப்படும் போது, மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான கூட்டு எதிரணியைச்
சேர்ந்த மிக
முக்கிய பிரமுகர்
ஒருவர் அதில்
பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
ரணில்
விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு
வரப்பட்ட நம்பிக்கையில்லா
பிரேரணை எதிர்வரும்
4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
இதன்போதே,
கூட்டு எதிரணியின்
மிக முக்கிய
பிரமுகர் நாட்டில்
தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை
என்று கூறப்படுகிறது.
இந்த
தகவலை வெளியிட்டுள்ள
ஆங்கில நாளிதழ்,
அந்த மிக
முக்கிய பிரமுகரின்
பெயரை வெளியிடவில்லை.
கூட்டு
எதிரணியின் நம்பிக்கையில்லா பிரேரணையில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.