தெஹிவளைகல்கிஸ்ஸை
மாநகர சபை ஆட்சி
பொதுஜன பெரமுணவுக்கு



கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையில் சம ஆசனங்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுண கட்சிகளில், பொதுஜன பெரமுண கட்சியிலிருந்து மாநகர மேயர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை சார்பில் .தே.. 36,985 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுண. கட்சி 36,029 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தெஹிவளை - கல்கிஸ்ஸை சபை அமர்வு இன்று (26) இடம்பெற்றது, இதன்போது இடம்பெற்ற மாநகர மேயர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் பொதுஜன பெரமுண கட்சியைச் சேர்ந்த நாவலகே ஸ்டேன்லி டயஸ் தெரிவானார்.
ஸ்டேன்லி டயஸிற்கு 23 வாக்குகளும், .தே.. சார்பில் போட்டியிட்ட சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளும் கிடைக்கப்பெற்றதாக அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top