ஓய்வு பெறுவதற்கான காலப்பகுதியை நெருங்கியுள்ள
ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தில் சலுகை
தேசிய
பாடசாலை ஆசிரியர்
இடமாற்ற வேலைத்திட்டத்தின்
கீழ் ஓய்வு
பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு
சலுகை வழங்குமாறு
அமைச்சர் அகிலவிராஜ்
காரியவசம் அதிகாரிகளுக்கு
பணிப்புரை வழங்கியுள்ளார்.
58ம்
59ம் வயது
எல்லைக்கு உட்பட்ட
ஆசிரியர்களுக்கு இந்த சலுகை கிடைக்கவுள்ளது.
ஒரே
தேசிய பாடசாலையில்
பத்து வருடங்களுக்கு
மேலாக தரம்
ஆறுக்கும் பதினொன்றுக்கும்
இடைப்பட்ட வகுப்புக்களில்
கற்பித்த ஆசிரியர்களுக்கான
இடமாற்றம் இம்மாத
இறுதியில் அமுலாகவுள்ளது.
இதனால் உரிய
பாடசாலைகளில் நீண்டகாலமாக கற்பித்து வரும் ஆசிரியர்களை
அவர்களின் விருப்பத்திற்கு
அமைய உரிய
பாடசாலையில் கற்பிக்க இடமளிக்குமாறு அமைச்சர் பணிப்புரை
வழங்கியுள்ளார்.
தேசிய
பாடசாலைகளில் கற்பிக்கும் தரம் ஆறுக்கும் பதினொறுக்கும்
இடைப்பட்ட வகுப்புகளுக்கான
ஐயாயிரத்து 500 ஆசிரியர்களுக்கு இம்மாத இறுதியில் இடமாற்றம்
வழங்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.