நம்பிக்கையில்லா
பிரேரணையை தோற்கடிக்க
ஐ.தே.க. செயற்குழுவில் தீர்மானம்
தற்போதுள்ள செயற்குழு
எதிர்வரும் ஏப்ரல் 30 வரையே செயற்படும்
பிரதமர்
ரணில் விக்ரமசிங்கவுக்கு
எதிரான நம்பிக்கையில்லா
பிரேரணையை தோற்கடிக்கவும்,
கட்சியில் மிகப்
பாரிய மாற்றங்களை
மேற்கொள்ளவும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்
கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த
எதிர்க்கட்சியினால், பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள,
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில், ஐக்கிய தேசியக்
கட்சியின் செயற்குழு
உறுப்பினர்களின் விசேட கூட்டம் இன்று (29) இடம்பெற்றது.
இதன்போதே ஏகமனதாக
குறித்த தீர்மானம்
எடுக்கப்பட்டதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா
தெரிவித்துள்ளார்.
கட்சியின்
உறுதித் தன்மையை
நிலைநாட்டு, அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத்
தேர்தல் முடிவுகள்
தொடர்பில் ஆராய்வற்காக,
ஐ.தே.க.வினால்
நியமிக்கப்பட்ட குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட
முன்மொழிவுகள் விரைவில் அமுல்ப்படுத்தப்படும்
என பிரதமர்
ரணில் விக்ரமசிங்க,
இதன்போது தெரிவித்ததாக
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொள்கைகள்
தொடர்பில் ஆராய,
கட்சியின் பிரதித்
தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாச தலைமையிலான
முதலாவது குழுவினால்
38 முன்மொழிவுகளும், கட்சியின் மறுசீரமைப்பு
தொடர்பில் ஆராய
அமைச்சர் ருவன்
விஜேவர்தனவினால் அமைக்கப்பட்ட குழுவில் 27 முன்மொழிவுகளும், பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அளவதுகொட தலைமையில்,
கட்சியின் அமைப்பாளர்கள்
மற்றும் ஏனைய
உறுப்பினர்கள் தொடர்பிலும் ஆராயும் குழுவின் முன்மொழிவுகளும்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது
தவிர கட்சியின்
மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள்
தொடர்பான நன்மை,
தீமைகள் தொடர்பிலும்
ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன்
தற்போதுள்ள செயற்குழு எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்
திகதி வரையே
செயற்படும் எனவும், அதன் பின்னர் புதிய
செயற்குழு உறுப்பினர்களை
தெரிவு செய்யவும்
முடிவு செய்யப்பட்டதாக
அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.