பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி
பாக் உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம்
இலங்கை விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கட் அணி இன்று (27) பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு விஜயம் செய்தது.
ICC பெண்கள் சம்பியன் கிண்ணத்தின் தகுதிகாண் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ளது.
இவ்விரு அணிகளும், மோதிய 3 போட்டிகளிலும் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்தொடரின் இரண்டாவது போட்டி 30 ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 31 ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர இரு அணிகளும் மோதும் 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடர், நாளை கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு விஜயம் செய்த, பிஸ்மா மஹ்ரூப் தலைமையிலான பெண்கள் அணியை, பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் ஜன்பாஸ்கான் வரவேற்று வாழத்துக்களை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.