கல்விப் பொதுத்
தராதரப் பத்திர சாதாரண
பரீட்சை முடிவுகள் மார்ச் 28 இல் வெளியீடு
969பரீட்சாத்திகளின் முடிவுகள் இடைநிறுத்தம்
கடந்த
2017 டிசம்பரில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப்
பத்திர சாதாரண
தரப் பரீட்சை
பெறுபேறுகள், எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி
வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக,
கல்வி அமைச்சு
அறிவித்துள்ளது.
இப்பரீட்சைகளின்போது
இடம்பெற்ற பல்வேறு
மோசடிகள் மற்றும்
சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சாத்திகளின்
பரீட்சை முடிவுகள்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள
அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த
வருடம், 2017 டிசம்பர் 12 ஆம் திகதி முதல்
டிசம்பர் 21 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.
நாடு
முழுவதிலுமுள்ள 5,116 பரீட்சை நிலையங்களில்
இடம்பெற்ற இப்பரீட்சையில்,
6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பாடசாலை மற்றும் தனிப்பட்ட
பரீட்சார்த்திகள் விண்ணப்பிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.