முல்லைத்தீவில் இரண்டுகால்களுடன்
பிறந்துள்ள அதிசய பசுக் கன்று!
முல்லைத்தீவில் இரண்டு கால்களை கொண்ட அதிசயக் பசுக் கன்று ஒன்று பிறந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலேயே குறித்த கன்றுக்குட்டி நேற்று பிறந்துள்ளது.
முன்னங்கால்கள் இரண்டும் இல்லாத நிலையில் தனியே இரண்டு கால்களுடன் மட்டும் குறித்த பசுக் கன்று பிறந்துள்ளது.
இதனால் பசுக் கன்று பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதகத் தெரிவிக்கப்படுகின்றது. எழுந்து நின்று உணவு அருந்த முடியாமல் தவிப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதிசயிக்கும் வகையில் இரண்டு கால்களுடன் பிறந்த பசுக் கன்றை அந்தப் பகுதி மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனைர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.