130 ஓட்டங்கள்
வித்தியாசத்தில்
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வென்றது
மெல்போர்னில்
இன்று நடந்த
உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில்
தென் ஆப்பிரிக்காவும்
இந்தியாவும் மோதின.
நாணயற்
சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் தேர்வு
செய்த இந்திய
அணி 50 ஓவர்களில்
7 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்களைக்
குவித்தது. இன்றைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்
ரோகித் சர்மா
ரன்அவுட் ஆனார்.
இதனையடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும்
தவான் இந்திய
அணிக்கு ஓட்டங்களைச்
சேர்த்தனர். இந்தியா 27.1 ஓவரில் 136 ஓட்டங்கள்
எடுத்திருந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர வீரர்
விராட் கோலி
46 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஷிகர் தவான்
சதம் கடந்தார்.
தவானுக்கு பக்கபலமாக
நின்று ரெகானேவும்
நிதனாமாக ஆடினார்.உலக கிண்ணக் கிரிக்கெட்
போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில்
அதிக ஓட்டங்கள்
அடித்த வீரர்
என்ற சாதனையை
தவான் செய்துள்ளார்.
தோணி சற்று
அதிரடியாக ஆடி
18 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற
இலக்குடன் களம்
இறங்கிய தென்
ஆப்பிரிக்கா அணி
40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ஓட்டங்களே
எடுத்தது. அணியில்
அதிகபட்சமாக பிளிசிஸ் 55 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்
மூலம் இந்திய
அணி 130 ஓட்டங்கள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணியில்
அஸ்வின் 3 விக்கெட்டுகளையும்,
முகம்மது சமி,
மோகித் சர்மா
தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
உலகக்
கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க
அணியுடன் இந்திய
அணி பெறும்
முதல் வெற்றி
இது என்பது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.