ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன மனைவியுடன்
புத்தகயாவில் பிரார்த்தனை
இந்தியா
சென்றுள்ள ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன, தனது மனைவி
ஜெயந்தி உட்பட 24 பேர் குழுவுடன், நேற்று பீகார்
மாநிலம் புத்தகயாவுக்கு
சென்றார். மகாபோதி
ஆலயத்தில் புத்தருக்கு
ஞானம் கிடைத்த
போதி மரத்தின்
கீழ் நின்றவாறு,
15 நிமிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரார்த்தனை
செய்தார்.
மகாபோதி
ஆலயத்தில் 1 மணி நேரமாக பல்வேறு பிரார்த்தனைகளை
மேற்கொண்ட அவர்,
பின்னர், அருகில்
உள்ள இலங்கை
மடத்துக்கு சென்றார். அங்கு, மகாபோதி கோயில்
நிர்வாகம் சார்பாக,
தேநீர் விருந்து
அளிக்கப்பட்டது. இதையடுத்து, கயா விமான நிலையத்துக்கு
சென்ற ஜனாதிபதி
, அங்கிருந்து சிறப்பு விமானம்
மூலமாக, திருப்பதி
சென்றார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.