மருதம் கலைக்கூடல்
மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார்!
மருதம்
கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா
இன்று 21 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை
மஹ்மூத் மகளிர்
கல்லூரி மண்டபத்தில்
நடைபெறவுள்ளது.
மன்றத்தின்
தலைவர் செயிட்
அஸ்வான் சக்காப்
மௌலானா தலைமையில்
இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை
அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்
பிரதம அதிதியாக
கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்வில்
ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத், மருதம்
கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு சிறப்புரையை
நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன்
கலாபூசணம் கே.எம்.ஏ.அசீஸ், பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக், கவிஞர் எம்.எம்.ஜமால்தீன்
ஆகியோர் இந்நிகழ்வில்
கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதன்போது
நூறு மாணவர்களுக்கு
பாடசாலை உபகரணங்கள்
வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.