விரைவில் 5500
பட்டதாரிகளுக்கு
அரச சேவையில் நியமனம்
அரச
சேவையில் 5500 பட்டதாரிகளுக்கு புதிதாக நியமனம் வழங்குவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக,
பொது நிர்வாக
மற்றும் உள்ளூராட்சி
அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச
துறையில் தொழில்வாய்ப்பு
கிடைக்காதவர்கள் முன்வைத்த மேன்முறையீட்டுக்கு
அமைய, இந்த
நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கடந்த
காலத்தில் விண்ணப்பித்து
வாய்ப்பு கிடைக்காதவர்கள்
இம்முறை இந்நியமனத்தில் உள்ளடக்கப்படுவார்கள்
என்றும் இவர்களுக்கான
நியமனக் கடிதங்களை
விரைவில் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய
அரசாங்கத்தில், அரச துறையில் 10 லட்சம் புதிய
வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.