கிராம இராச்சிய முறைமையொன்றை உருவாக்கத் திட்டம்

மக்களுக்கு சேவையாற்ற அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   மக்களுக்கு  சேவையாற்றுவதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் கோரியுள்ளார்.  
அலரி மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   இணக்கப்பாடுகளுடன் கூடிய கூட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   மக்களுக்கு சேiவயாற்றுவதற்கான இந்த முயற்சியிலிருந்து எவரும் விலகிச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.   மிகவும் நீதியானதும் சுயாதீனமானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதியும் தாமும் ஏனைய அனைத்து கட்சி உறுப்பினர்களையும் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   கிராம இராச்சிய முறைமையொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும்.  தெரிவித்த பிரதமர்  ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் 60 மாத காலத் திட்டமொன்றின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.   குறைந்தபட்சம் 24 மாதங்களேனும் இந்த திட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.   பிளவடைந்து தனித்தனியாக செயற்படுவதனால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top