தேசிய அரசாங்கம் தொடர்பான
உடன்படிக்கை கைச்சாத்து
கருத்தொற்றுமையை கட்டியெழுப்புவதற்கு கைக்கோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு அமைய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பின்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.