ஓட்டமாவடியில் துப்பாக்கிச்
சூடு; குடும்பஸ்தர் உயிரிழப்பு!
பிரதியமைச்சர் அமீர்
அலியின் ஆதரவாளர் எனத் தெரிவிப்பு!!
மட்டக்களப்பு
மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஹுதாப் பள்ளி
புகையிரத வீதிக்கு
அருகில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்
இன்று 15 ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.45 மணியளவில்
நடைபெற்றுள்ளது துப்பாக்கிச்
சூட்டில் அவர்
படுகாயமடைந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார். அவ்விடத்தில்
மறைந்து நின்ற
இனந்தெரியாத இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த துப்பாக்கியினால்
இவர் மீது
துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச்
சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிதாரியை
கைது செய்யும்
பொருட்டு பொலிஸார்
பொது மக்களின்
உதவியையும் நாடியுள்ளனர்.
மரணமடைந்தவர்
ஓட்டமாவடி 03ம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜமால்தீன்
அமீன் (வயது
– 35) மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
இச்
சம்பவம் தொடர்பாக
வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றளர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.