அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விடுத்துள்ள

அவசர வேண்டுகோள் !



2016.05.18
தற்போது நாடு முழுவதும் பெய்துவரும் மழை காரணமாக மண்சரிவு, வெள்ளம் போன்ற பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டு பொதுமக்கள் தமது வாழ்விடங்களை இழந்துள்ளதுடன் பாரியளவிலான உடமைகளும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுகை, துஆ, பாவமன்னிப்புத் தேடுதல் போன்ற வணக்க வழிபாடுகளில் நபி ல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈடுபடுவார்கள்.
எனவே அல்லாஹ்வின் அன்பையும் றஹ்மத்தையும் நெருக்கத்தையும் பெற்றுத்தரக் கூடிய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுமாறும் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை நீங்கி பொதுமக்கள் தமது வழமைக்குத் திரும்புவதற்காக பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது சகல மாவட்ட, பிரதேச கிளைகளை வேண்டிக் கொள்கின்றது. மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் அனைவரையும் இவ்விடயத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடாக உதவிகள் செய்ய விரும்புவோர் தமது நிதியை கீழ்வரும் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எதிர்வரும் 20.05.2016 மற்றும் 27.05.2016 ஆம் திகதி ஜும்ஆக்களில் நிவாரண உதவிகளை (பணமாக) சேமித்து இவ்வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யுமாறும் அது பற்றிய தகவலை எமக்கு அறியத்தருமாறும் சகல பள்ளிவாயல்களின் நிருவாகிகளையும் கேட்டுக் கொள்கின்றோம்.
வஸ்ஸலாம்
All Ceylon Jamiyyathul Ulama

Account Number: 1901005000

Commercial Bank
Islamic Banking Unit
Swift Code: CCEYLKLX

அஷ்-ஷைக் எம்.எம். முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top