சற்றுமுன் அரநாயக்கவில் மற்றுமொரு பாரிய மண்சரிவு!

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.

.கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பெரவிலகந்தவில் சற்றுமுன் மற்றுமொரு பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
குறித்த அனர்த்தம் தற்போது ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறுகின்றது.
இந்தப் பகுதியில் அனேக மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றி இதுவரையில் எந்தத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
எனினும் இராணுவத்தினர் குறித்த இடத்தை நோக்கிச் செல்வதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top