ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் பூட்டு
சின்னம்மை பரவலே காரணம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களிடையே சின்னம்மை நோய் பரவியதை அடுத்து, பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் 27 பேருக்கு சின்னம்மை பரவியதை அடுத்து, ஏனைய மாணவர்களுக்கும் இந்நோய் பரவும் எனும் அச்சத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக உபவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment