முன்னாள் பிரதமரின் மரணத்தில்

அரசியல் முக்கியஸ்தர்களான மஹிந்த மற்றும் துமிந்த சந்திப்பு

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

முன்னாள் பிரதமரை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கொழும்பு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மரணத்தின் போது அரசியல் முக்கியஸ்தர்களான மஹிந்த மற்றும் துமிந்த சந்தித்து கலந்துரையாடியது தொடர்பிலான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதேவேளை, மறைந்த முன்னாள் பிரமரின் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும் நோக்கில் அவரின் உடல் நாளைய தினம் ஒரு மணித்தியாலம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தனது 83 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top