இந்திய அரசாங்கத்தின் உதவியினால் வழங்கப்பட்ட
1990 அவசர சேவை அம்பியூலன்ஸ் வண்டியில்
முதன் முதலாக பிறந்த குழந்தை
அவசர சேவை அம்பியூலன்ஸ் வண்டியில் முதன் முதலாக குழுந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவியினால் வழங்கப்பட்ட 1990 அவசர சேவை அம்பியூலன்ஸ் வண்டியில் கடந்த புதன்கிழமை இந்தக் குழந்தை பிறந்துள்ளது.
மாத்தறை தெலிஜ்ஜவில பிரதேசத்தில் இருந்து 28 வயது நிரம்பிய தாயொருவரை 1990 அவசர சேவை அம்பியூலன்ஸ் வண்டியில் மாத்தறை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் போது வண்டியில் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து தாயும் சேயும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1990 இந்திய அம்பியூலன்ஸ் வண்டியில் இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் இடம்பெறுவது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.