ரவிராஜ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்
சந்தேக நபர்கள்  அனைவரும் விடுதலை


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட  ஜூரிகள் சபை  இன்று சனிக்கிழமை அதிகாலை  விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட  ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மன்றில் நிறுத்தப்படாத முதலாவது, இரண்டாவது எதிரிகளையும்மன்றில் நிறுத்தப்பட்டிருந்த மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது எதிரிகளையும் விடுவித்து தீர்ப்பளிப்பதாக,ஜூரிகள் ஏழு பேரும் அறிவித்தனர்.

இன்று சனிக்கிழமை  அதிகாலை 12.20 மணியளவில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடற்படைப் புலனாய்வாளர்களும், கருணா குழு உறுப்பினர்களும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவுக்கு  இராணுவத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது என்று இராணுவம் ஒப்புக் கொண்டிருந்தமை உள்ளிட்ட சான்றுகளும் சாட்சியங்களும் முன்வைக்கப்பட்ட போதும்ஜூரிகள் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்துள்ளனர்.


.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top