சசிகலா முன் கைகட்டி நின்ற
துணை வேந்தர்கள்
கவர்னர் விசாரிக்க கோரிக்கை
பல்கலைகளின் துணை வேந்தர்கள், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவை சந்தித்து, அவர் முன் கைகட்டி நின்ற சம்பவம், கல்வியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு அதிகாரிகள், போயஸ்கார்டன் சென்று, அவர் முன், கைகட்டி நிற்பது வழக்கம். அவர் மறைந்த பின், அவரது தோழி, சசிகலாவை சந்தித்து, கைகட்டி நிற்கும் நடைமுறையை, பலர் மீண்டும் புதுப்பித்து வருகின்றனர். அரசு பல்கலைகளில், சமீபத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட துணை வேந்தர்கள், போயஸ் கார்டன் சென்று, சசிகலாவை நேரில் சந்தித்தனர். அவர் முன் கைகட்டி நின்று திரும்பினர்.
இது குறித்து, வெளியான புகைப்படத்தை பார்த்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.