மருத்துவமனையிலிருந்து வெளியானது கருணாநிதியின்
தொலைகாட்சி பார்ப்பது போன்ற புகைப்படம்!
கடந்த 1ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 7ஆம் திகதி வீடு திரும்பினார்.
இந்நிலையில், டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தற்போது மருத்துவமனையின் உள்ளே கருணாநிதி சேரில் உட்கார்ந்து தொலைகாட்சி பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு, லம்பார் பஞ்சர் எனப்படும் முதுகு தண்டுவடத்தில் திரவத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்களாம்.
அதன் ரிசல்ட் வந்தவுடன் இரு தினங்களுக்குப் பின்பு கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.