ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான, இலங்கைத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் கலாநிதி முஹம்மட் சரீப் அனீஸ் அவர்களை பாராட்டுதல் மற்றும் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று 18 ஆம் திகதி (2017.08.18) வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.
வவுனியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹூமான், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், கலாநிதிகளான அஸீஸ், மரைக்கார், டாக்டர் இல்யாஸ், கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன், மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அமீன், தேசிய வடிவமைப்பு நிறுவனத் தலைவர் மில்ஹான், அமைச்சரின் வவுனியா மாவட்ட இணைப்பாளர்களான அப்துல் பாரி, முத்து முகம்மது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான டாக்டர் ஷாபி, டாக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் பள்ளி பரிபாலன சபை, பழைய மாணவர் சங்கம் உட்பட ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.
அமைச்சின் ஊடகப்பிரிவு.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.